ஊழலை மறைப்பதற்காக மொழியை வைத்து திமுக அரசியல் செய்கிறது : அமித் ஷா குற்றச்சாட்டு!
Sep 7, 2026, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

ஊழலை மறைப்பதற்காக மொழியை வைத்து திமுக அரசியல் செய்கிறது : அமித் ஷா குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Mar 21, 2025, 07:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் பாடங்களைத் தமிழில் பயிற்றுவிக்கும் திட்டத்தை அமல்படுத்த திமுக அரசுக்குத் தைரியம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டி உள்ளார்.

மாநிலங்களவையில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஊழலை மறைப்பதற்காக மொழியை வைத்து திமுக அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டினார்.

மும்மொழிக் கொள்கை தொடர்பாக திமுக அரசு மக்களிடையே விஷத்தைப் பரப்புவதாக விமர்சித்த அவர், மொழியின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த திமுக முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அனைத்து மொழிகளுமே இந்தியத் திருநாட்டின் பொக்கிஷம் தான் என்றும் அவர் தெரிவித்தார். தாங்கள் தென்மாநில மொழிகளுக்கு எதிரானவர்கள் என்ற பிம்பத்தைக் கட்டமைக்க திமுக அரசு முயல்வதாகக் குற்றம் சாட்டிய அமித்ஷா, தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் பாடங்களைத் தமிழில் பயிற்றுவிக்கும் திட்டத்தை அமல்படுத்த திமுக அரசுக்குத் தைரியம் இல்லை எனவும் விமர்சித்தார்.

மேலும், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் மருத்துவம், பொறியியல் கல்வி தமிழில் கற்பிக்கப்படும் என்றும் அமித்ஷா உறுதியளித்தார்.

மத்திய அரசு ஒவ்வொரு மொழியையும் இந்த தேசத்தின் மதிப்புமிக்கதாக கருதுவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதை எல்.முருகன் மேற்கோள் காட்டியுள்ளார். இது குறித்து அவர், தனது எக்ஸ் தளப்பக்கத்தில் நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேசியதை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார்.

ஊழலை மறைக்க மொழியை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகுந்த பதில் அளித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசியதை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் மேற்கோள்காட்டியுள்ள அண்ணாமலை, இந்தியாவின் ஒவ்வொரு மொழியும் இந்திய கலாச்சாரத்தின் அடையாளம் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: DMKMK StalinDMK is using language to cover up corruption - Amit Shahதிமுக அரசியல் செய்கிறது
Share
Tweet
SendShare
Previous Post

கர்நாடகா சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள்!

Next Post

நகர்மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒப்பந்ததாரர்!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies