வம்பிழுக்கும் பாகிஸ்தான் : வரைபடத்திலேயே இருக்காது என இந்தியா எச்சரிக்கை!
Sep 12, 2026, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வம்பிழுக்கும் பாகிஸ்தான் : வரைபடத்திலேயே இருக்காது என இந்தியா எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 03:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூரில் இந்தியாவின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சரணடைந்த நிலையில் பாகிஸ்தான் மீண்டும் அடாவடியான கருத்துக்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவுடன் முழு அளவிலான போருக்குத் தயார் என்று கூறியுள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப் மீண்டும் இந்தியாவை வம்புக்கு இழுத்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற நாளில் இருந்தே இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 26 அப்பாவி சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்றனர். இதற்குப் பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. பதிலுக்கு இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி ஏவிய அனைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை நடுவானிலேயே இடைமறித்து இந்தியா தாக்கி அழித்தது. மேலும் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மற்றும் ராணுவ நிலைகளையும் இந்தியா தாக்கி அழித்தது.

இந்தியாவின் அதிரடி தாக்குதலை தாங்க முடியாமல் போரை நிறுத்துமாறு பாகிஸ்தான் இந்தியாவுடன் கெஞ்சியது. இந்தியாவும் தற்காலிகமாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நிறுத்தியது. எனினும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் உட்பட அந்நாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வருகின்றனர். சமீபத்தில் டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு பின்னணியில் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது என்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பலுசிஸ்தானில் அமைதியின்மையைத் தூண்டுவதாகப் பாகிஸ்தான் வைக்கும் குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துவருகிறது. இந்நிலையில், அதற்காகவே டெல்லி கார் குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் ஈடுபட்டதாக ஈடுபட்டதாகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முன்னாள் “பிரதமர்” அன்வாருல் ஹக், பகிரங்கமாகக் கூறியுள்ளார். பலுசிஸ்தானில் இந்தியா வன்முறையைத் தூண்டினால், செங்கோட்டை முதல் காஷ்மீர் காடுகள் வரை இந்தியாவைத் தாக்குவோம் என்று தான் முன்பே சொன்னதாகவும், அல்லாவின் அருளால், அதைச் செய்துவிட்டதாகவும், இந்தியாவில் கொல்லப்பட்டவர்களின் உடல்களைக் கூட இன்னும் எண்ண முடியவில்லை என்று அன்வாருல் ஹக் பாகிஸ்தான் ஆக்கரமிப்பு காஷ்மீரின் சட்டமன்றத்தில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

அண்மையில் இஸ்லாமாபாத்தில் நீதிமன்றம் அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில், இந்திய ஆதரவுடன் செயல்படும் தீவிரவாதிகள் ஈடுபட்டதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றஞ்சாட்டினார். இஸ்லாமாபாத் கார் குண்டுவெடிப்புக்குப் பதிலளிக்க பாகிஸ்தானுக்கு முழு பலம் உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையில் பேசிவரும் க்வாஜா ஆசிப், கிழக்கு எல்லையில் இந்தியாவுக்கும், மேற்கு எல்லையில் தலிபான்களுக்கும் எதிரான இருமுனை போருக்குப் பாகிஸ்தான் முழு அளவில் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார். இந்தியாவுடனான முதல் சுற்று போரில் இறைவன் பாகிஸ்தானுக்கு உதவியது போல், இரண்டாம் சுற்று போரிலும் உதவுவார் என்றும் தெரிவித்துள்ள அவர், இறுதிச் சுற்றை இந்தியா விரும்பினால், முழுப் போரைத் தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு ட்ரைலர் தான் என்று கூறிய இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, ஆப்ரேஷன் சிந்தூர் ஒன்றில் காட்டிய நிதானத்தை ஆப்ரேஷன் சிந்தூர் இரண்டில் காட்டப் போவதில்லை என்றும், போருக்கு முழுமையான தயார் நிலையில் இந்தியா உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறிய உபேந்திர திவேதி, ஆப்ரேஷன் சிந்தூர் இரண்டில் பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்குமா என்று யோசிக்க வேண்டிய அளவுக்குத் தாக்குதல்கள் தீவிரமாக இருக்கும் என்றும் எச்சரித்திருந்தார்.

Tags: ஆப்ரேஷன் சிந்தூர்Pakistan is bragging: India will not be on the mapfinal warningIndiapakistannewsToday
Share
Tweet
SendShare
Previous Post

ராணிப்பேட்டை : விஜய் பட பாடலுக்கு நடனமாடிய பேரிடர் மீட்பு படை வீரர்கள்!

Next Post

பாகிஸ்தான் வாங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் : எதையும் சமாளிக்க தயார் – இந்திய கடற்படை!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies