பாகிஸ்தான் வாங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் : எதையும் சமாளிக்க தயார் - இந்திய கடற்படை!
Apr 29, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தான் வாங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் : எதையும் சமாளிக்க தயார் – இந்திய கடற்படை!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 04:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானுக்கு அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை சீனா வழங்கும் நிலையில், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இது பிராந்திய கடல் சமநிலையை கெடுக்கும் பாகிஸ்தானின் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

சீனா உடனான 5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தான் 8 ஹேங்கர் ரக டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் 2015-ல் கையெழுத்தான நிலையில், 4 நீர்மூழ்கிக் கப்பல்கள் சீனாவிலும், நான்கு பாகிஸ்தானிலும் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. ஆப்ரேஷன் சிந்தூரின்போது, பாகிஸ்தான் பயன்படுத்திய சீனாவின் ராணுவ தளவாடங்கள் பல்லைக் காட்டிய நிலையில், குளோபல் டைம்ஸ்-க்கு பேட்டியளித்த பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் நவீத் அஷ்ரஃப், சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான கடற்படை ஒத்துழைப்பு இருநாடுகள் உறவில் புதிய மைல் கல் என்று கூறியிருந்தார்.

மே மாதத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் மண்ணை கவ்விய பாகிஸ்தான், அதன் பின்னர் கடற்படையை வலுப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது… இந்த நிலையில், இந்திய கடற்படை வைஸ் அட்மிரல் வத்சாயன், இந்தியாவின் கடல் எல்லையை பாதுகாக்க, கடற்படை எப்போதும் தயாராக உள்ளதாகக் கூறினார். சீனா பாகிஸ்தானுக்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பிற கப்பல்கள் வழங்குவதை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறினார். பாகிஸ்தான் கடற்படையில் நீர்மூழ்கிக் கப்பல்கள் விரைவில் சேர்க்கப்படும் என்று நம்புவதாகக் கூறிய அவர், அதை எதிர்கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்த்துறையில் நமக்கு என்னென்ன திறன்கள் தேவை என்பதை இந்திய கடற்படை அறியும் என்று கூறினார்.

தற்போது இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்று அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களும், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட பல டீசல் மின்சார தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களும் உள்ளன. கடற்படையில் நவீன போர்க்கப்பல்கள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருவதைக் குறிப்பிட்ட வைஸ் அட்மிரல், சீனா ஃபுஜியன் விமானம் தாங்கிக் கப்பலை இணைத்த போதிலும், இந்தியா கடல்சார் வலிமையை தக்க வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

சீனாவை பொறுத்தவரை, அவர்களது மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பல் வந்துவிட்டது.. எனினும், இந்தியாவில் கட்டுமானத்தில் உள்ள கப்பல்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் வழங்கப்படும் என்றும், இது இந்திய கடற்படையை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தார். பாகிஸ்தான் கடற்படையில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் சேர்க்கப்படுவது ஒருவகையில் இந்தியாவுக்கு சவால் விடும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

Tags: Pakistan to buy Chinese submarines: Indian Navy ready to deal with anythingபாகிஸ்தான் வாங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள்PM Modiindian armyindian navyஇந்திய கடற்படை
ShareTweetSendShare
Previous Post

வம்பிழுக்கும் பாகிஸ்தான் : வரைபடத்திலேயே இருக்காது என இந்தியா எச்சரிக்கை!

Next Post

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை அரங்கேற்ற திமுக அரசு திட்டம் – அண்ணாமலை

Related News

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies