தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் இருவேறு இடங்களில் நடத்திய சோதனையில் 16 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சட்டமன்ற தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பென்னாகரம் அருகே உள்ள நாகதாசம்பட்டி பகுதியில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துவந்த சதீஷ் என்பவரிடம் 12 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல, செட்டி அள்ளி பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் முருகேசன் என்பவரிடம் 4 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இருவேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 16 லட்சத்து 24 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
















