காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி என்றும், தனது கூட்டணி கட்சிகளையே முதுகில் குத்தும் எனவும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தற்போதைய தமிழகச் சூழலைச் சற்று உற்றுநோக்குங்கள் என தெரிவித்தார்.
கடந்த முப்பது ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவிற்கும் இடையே மிக நெருக்கமான உறவு நிலவி வந்தது என்றும், காங்கிரஸை பல்வேறு நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுத்தது திமுக எனவும் கூறினார்.
காங்கிரஸின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் தொடர்ந்து பாடுபட்டு வந்த அதே திமுக, அரசியல் சூழல் மாறிய கணமே நம்பிக்கை துரோகத்திற்கு ஆளானது என குறிப்பிட்டுள்ளார்.
அதிகார வெறியால் உந்தப்பட்ட காங்கிரஸ் கட்சி, தனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே திமுகவின் முதுகில் குத்திவிட்டது என தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி என்றும், தனது கூட்டணிகளையே முதுகில் குத்தும் எனவும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
















