கர்நாடக அணைகள் நிரம்பியதால் அதன் உபரிநீர்தான் தமிழகத்திற்கு வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், மேகதாது அணை தொடர்பான திருத்தத்தை ஏற்கமாட்டோம் என தெரிவித்தார். கர்நாடகாவை போல் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், அனைத்துக் கட்சியினரின் கருத்துக்களையும் அரசு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.
விவசாயிகளின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவிடம் இருந்து போராடி தண்ணீரை பெறுகிறோம் என்றும், காவிரி நீர் கிடைக்காமல் ஒருலட்சம் ஏக்கர் விவசாய நிலம் வறண்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேகதாது அணை தொடர்பான இடைச்செருகலை அதிமுக ஏற்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என – இபிஎஸ் குறிப்பிட்டார்.,
















