தேர்தல் தோல்விக்கு காரணமான மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அக்கட்சி நிர்வாகிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
திமுக நிர்வாகிகள் எழுதியுள்ள கடிதத்தில், கள ஆய்வு குழு, மறு சீரமைப்பு குழு அறிக்கை வழங்கி பல நாட்கள் ஆகியும் தேர்தல் தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.\
திமுக தலைவரின் இந்த தயக்கம் தான், தேர்தல் தோல்விக்கு முதல் காரணம் என குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள், ஈரோடு மாவட்டச் செயலர் தோப்பு வெங்கடாசலத்தை நீக்கியதும், புது மாவட்டச் செயலரை உடனே ஏன் அறிவிக்கவில்லை என வினவியுள்ளனர்.
இரு தொகுதிகளை பிரித்து மீண்டும் பழைய மாவட்டச் செயலர்களிடமே பொறுப்பு தரப்பட்டுள்ளது எனக் கூறியுள்ள நிர்வாகிகள், வேறு யாரை நியமிப்பது என்ற குழப்பமே, தலைமைக்கு மாவட்ட நிலவரம் தெரியவில்லை என்பதை உணர்த்துக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
மாவட்ட செயலாளரை நீக்கினால் அவர் வேறு கட்சிக்கு செல்வார்கள் என்ற தயக்கத்தை போக்காமல் மாற்றம் என்பது சாத்தியல்ல என்பதை ஸ்டாலினும், உதயநிதியும் சிந்திக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், நிர்வாகிகள் நியமனத்தில் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு, பழைய முகங்களுக்கு ‘குட் பை’ சொல்ல தயக்கம் காட்டக்கூடாது என திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
















