பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜஸ்டின் மணிகண்டன் மீது, மேலும் ஒரு நில மோசடி வழக்கு தொடர்பாக 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பழனி அருகே பழைய ஆயக்குடி பகுதியில் உள்ள தனியார் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக புதிய புகார் எழுந்துள்ளது.
கோவையில் இறந்துபோன நபர்களின் பெயரில் போலி உயில் சாசனங்களைத் தயாரித்து, மணி என்பவர் நிலத்தை முறைகேடாக விற்பனை செய்ததும், ஏற்கனவே பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஜஸ்டின் மணிகண்டன் அதனைப் பத்திரப்பதிவு செய்து கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மணி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஜஸ்டின் மணிகண்டன், மணி மற்றும் நிலத்தை வாங்கிய கந்தசாமி ஆகிய 3 பேர் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
















