தமிழகத்தில் சமூகநீதி குறித்த பேசப்படுகிறது, ஆனால் நடைமுறையில் இல்லை என- ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 156 வது பிறந்தநாளையொட்டி கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து ஆளுநர் ரவி பேசியதாவது : “காந்திமண்டபத்தில் பராமரிப்பு இல்லாமல் குப்பைகளும் மதுபட்டில்களை பார்த்து வேதனையடைந்தேன். நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆனாலும் தலித் மக்களுக்களுக்கு எதிரான பாகுபாடு நீங்கவில்லை. தமிழகத்தில் சமூகநீதி பேசுகிறார்களே தவிர நடைமுறையில் இல்லை.
நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும்
தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் ncrb புள்ளிவிவரங்களின்படி தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணத்தில் 60 பேர் தலித் மக்கள் தான். தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் கழிவுகள் கலக்கப்படுகிறது. கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது . தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களை பார்த்து வெட்கப்படுகிறேன் என ஆளுநர் ரவி கூறினார்.