பாகிஸ்தான் வாங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் : எதையும் சமாளிக்க தயார் - இந்திய கடற்படை!
Jan 14, 2026, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தான் வாங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் : எதையும் சமாளிக்க தயார் – இந்திய கடற்படை!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 04:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானுக்கு அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை சீனா வழங்கும் நிலையில், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இது பிராந்திய கடல் சமநிலையை கெடுக்கும் பாகிஸ்தானின் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

சீனா உடனான 5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தான் 8 ஹேங்கர் ரக டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் 2015-ல் கையெழுத்தான நிலையில், 4 நீர்மூழ்கிக் கப்பல்கள் சீனாவிலும், நான்கு பாகிஸ்தானிலும் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. ஆப்ரேஷன் சிந்தூரின்போது, பாகிஸ்தான் பயன்படுத்திய சீனாவின் ராணுவ தளவாடங்கள் பல்லைக் காட்டிய நிலையில், குளோபல் டைம்ஸ்-க்கு பேட்டியளித்த பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் நவீத் அஷ்ரஃப், சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான கடற்படை ஒத்துழைப்பு இருநாடுகள் உறவில் புதிய மைல் கல் என்று கூறியிருந்தார்.

மே மாதத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் மண்ணை கவ்விய பாகிஸ்தான், அதன் பின்னர் கடற்படையை வலுப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது… இந்த நிலையில், இந்திய கடற்படை வைஸ் அட்மிரல் வத்சாயன், இந்தியாவின் கடல் எல்லையை பாதுகாக்க, கடற்படை எப்போதும் தயாராக உள்ளதாகக் கூறினார். சீனா பாகிஸ்தானுக்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பிற கப்பல்கள் வழங்குவதை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறினார். பாகிஸ்தான் கடற்படையில் நீர்மூழ்கிக் கப்பல்கள் விரைவில் சேர்க்கப்படும் என்று நம்புவதாகக் கூறிய அவர், அதை எதிர்கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்த்துறையில் நமக்கு என்னென்ன திறன்கள் தேவை என்பதை இந்திய கடற்படை அறியும் என்று கூறினார்.

தற்போது இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்று அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களும், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட பல டீசல் மின்சார தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களும் உள்ளன. கடற்படையில் நவீன போர்க்கப்பல்கள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருவதைக் குறிப்பிட்ட வைஸ் அட்மிரல், சீனா ஃபுஜியன் விமானம் தாங்கிக் கப்பலை இணைத்த போதிலும், இந்தியா கடல்சார் வலிமையை தக்க வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

சீனாவை பொறுத்தவரை, அவர்களது மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பல் வந்துவிட்டது.. எனினும், இந்தியாவில் கட்டுமானத்தில் உள்ள கப்பல்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் வழங்கப்படும் என்றும், இது இந்திய கடற்படையை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தார். பாகிஸ்தான் கடற்படையில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் சேர்க்கப்படுவது ஒருவகையில் இந்தியாவுக்கு சவால் விடும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

Tags: PM Modiindian armyindian navyஇந்திய கடற்படைPakistan to buy Chinese submarines: Indian Navy ready to deal with anythingபாகிஸ்தான் வாங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள்
ShareTweetSendShare
Previous Post

வம்பிழுக்கும் பாகிஸ்தான் : வரைபடத்திலேயே இருக்காது என இந்தியா எச்சரிக்கை!

Next Post

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை அரங்கேற்ற திமுக அரசு திட்டம் – அண்ணாமலை

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies